இதுதான் கடவுள் சக்தியோ! பக்தர்கள் மூன்று பேர் கார் மோதி பலி

Viduthalai
1 Min Read

திருச்சி, பிப்.26 திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடைபயணமாக வரு கின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அய்வதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு நடைபயணமாக சென்றனர்.
இவர்கள் தொழுதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் அங்கு நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் காசி வேல் மற்றும் பாலமுருகன் என்ற இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அருகில் உள்ள பெரம்ப லூர் மருத்துவமனை செல்லும் வழியில் பாலமுருகன் உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிவேல் உயிரிழந்தார். இந்த விபத்து ராம நத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *