மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பேட்டி

1 Min Read

மதுரை,பிப்.26- தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என ஒன்றிய மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 1178.35 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு இதில் திருமங்கலம் வசந்தி நகர் வரை உயர்நிலை மேம்பாலமும், வசந்த நகர் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதையும், தல்லாகுளம் ஒத்தக்கடை வழியாக உயர்நிலை மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மெட்ரோ திட்டத்திற்கான விரிவான சாத்திய கூறு அருகே ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்காக காத்தி ருக்கிறது.

இதற்கிடையில் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு முதற்கட்டமாக பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு உரிமை யாளர்களிடம் ஒப்புதல் பெறுதல் ஒப்பந்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து மெட்ரோ இயக்குநர் மதுரையில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். கோயிலில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் பணிகள் நடைபெறும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பின்புதான் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிறுத்தம் அமைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *