முதலமைச்சர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை

Viduthalai
1 Min Read

தமிழ்நாட்டில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் நேற்று (24.2.2025) திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், 25 -50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அலைபேசியில் இந்த லைட் எரிகிறதா?
ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *