வல்லம்,பிப்.25- வல்லம் பெரியார் பாலிடெக்னிக்கில் 20.2.2025 அன்று ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் (TVS Motors Pvt. Ltd., Hosur) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 51 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஓசூர் டிவி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மகேஸ்வரி, மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சிறீராமச்சந்திரன் ஆகியோர் வளாக நேர்காணலில் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் பாலிடெக்னிக்கில் ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் வளாக நேர்காணலில் 51 பேர் தேர்வு

Leave a Comment