மனிதநேயம் எங்கே? சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள் மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

Viduthalai
3 Min Read

நாமக்கல்,பிப்.25- ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சோ்ந்தவா்கள் ப.இருசப்பன் (70) – ராசாத்தி இணையர். இவா்களுக்கு இரண்டு மகன்கள்.
தங்களது மகன்களுக்கு பூா்வீக சொத்துகளை பாகம் பிரித்துக் கொடுத்தனா். சொத்துகளை பெற்றுக் கொண்டவா்கள், பெற்றோரை கவனிக்கவில்லையாம். அன்றாடத் தேவைகளுக்கும், உணவுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த ப.இருசப்பன் – ராசாத்தி இணையர், இதுகுறித்து பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனு அளித்தனா்.
அதன் பேரில், ஆட்சியா் ச.உமா விசாரணை மேற்கொண்டு, வாழப்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்த பாக சாசன ஆவணத்தை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, அந்த இணையருக்கு சொத்து ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து இருசப்பன் கூறுகையில், பூா்வீக சொத்துகளை எங்களது இரண்டு மகன்களுக்கு பாகம் பிரித்துக்கொடுத்தோம். சொத்துகளை பெற்றுக் கொண்ட அவா்கள் எங்களை கவனிக்கவில்லை. அத்தியாவசியத் தேவைக்கும், உணவுக்கும் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். இதுகுறித்து நாங்கள் அளித்த மனு அடிப்படையில், பாக சாசனத்தை ஆட்சியா் ரத்து செய்து எங்கள் நிலத்தை திரும்ப ஒப்படைத்தாா்.
தற்போது, நானும், என் மனைவியும் மகன்களின் உதவியின்றி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் நிலை அறிந்து உதவிய தமிழ்நாடு அரசுக்கும், ஆட்சியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

75 ஆண்டுகளுக்குப் பின் தேர்தலை சந்தித்த
சத்தீஸ்கர் கிராம மக்கள்
சுக்மா,பிப்.25- நக்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் கேர்லபெண்டா கிராமத்தில், 75 ஆண்டுகளுக்கு பின், நடந்த பஞ்சாயத்து தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர்.
ஓட்டளித்த பலரும், ‘துப்பாக்கி சத்தத்தை விட ஓட்டு தான், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்’ என்றனர்.
மத்திய பிரதேசத்திலிருந்து, 2000ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக உள்ளார்.
நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள அந்த மாநிலத்தின், சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லபெண்டா என்ற கிராமம், 75 ஆண்டுகளுக்கு பின், இந்தத் தேர்தலை சந்தித்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 ஆண்டுகளாக அந்த பகுதியில் எந்த தேர்தலும் நடைபெறவே இல்லை.
நக்சல் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த அந்த பகுதி, இப்போது மெல்ல விடுபட்டு வருகிறது.மொத்தம் மூன்று கட்டங்களாக அந்த பகுதியில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், நேற்று முன்தினம் (23.2.2025) நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் உற்சாகமாக ஓட்டளித்த மக்கள் கூறியதாவது:
சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த வாகனங்களில் இந்த ஊருக்கு வந்து ஓட்டளித்தனர்.
வளர்ச்சியை நோக்கி நாங்கள் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக எங்களின் கோரிக்கைகளை, தலைவர்கள் முன் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
துப்பாக்கிகளை விட, ஓட்டு தான் எங்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என முழுமையாக நம்புகிறோம்.
சமீபகாலமாக, நக்சல்களுக்கு எதிரான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அய்.பி.எஸ்.
அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை,பிப்.25- தமிழ்நாட்டில் பல்வேறு அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
* ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்
* மாநில சைபர் க்ரைம் எஸ்.பி.யாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்.பி.யாக பணியிட மாற்றம்.
* சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம்.
* ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஜெயராம் அய்பிஎஸ் சென்னை ஆயுதபடை ஏடிஜிபியாக நியமனம்.
* மாநில சைபர் கிரைம் எஸ்.பி.யாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *