இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

2 Min Read

சென்னை,பிப்.25- பிப்ரவரி 25 (இன்று) முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) வறண்ட வானிலையே நிலவும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் பிப்ரவரி 25ம் தேதி (இன்று) முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டின்தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பிப்ரவரி 25ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். பிப்ரவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 27 வரை தென்தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு காவல் நீட்டிப்பு
காரைக்கால்,பிப்.25- காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தது. நீதிமன்ற உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீதான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (24.2.2025) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு மார்ச் 10ஆம்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் 13 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *