விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றிய அரங்கசாமி மறைவு

1 Min Read

இராணிப்பேட்டை, பிப். 25- ‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான ரெ.அரங்கசாமி (வயது 80) நேற்று (25.2.2025) பகல் 1 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
‘கடவுளர் கதைகள்’ என்ற நூலை எழுதியவர். ஏ.கஸ்தூரி என்ற வாழ்விணையரும், மகன் ஏ.செல்வம், மகள் ஏ.கவிதா ஆகியோர் இவருக்கு உள்ளனர். அவரது கண்கள் ‘விழிக்கொடை’க்கு வழங்கப்பட்டன.
இராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் அவரது மகன் இல்லத்திலிருந்து இன்று (25.2.2025) பிற்பகல் 2 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட கழக காப்பாள கி.இராமலிங்கம், தோழர் சீனிவாசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *