கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு பெரியார் உலகத்திற்கு ரூ.10 ஆயிரம்

Viduthalai
1 Min Read

ஆண்டிமடம், பிப். 24- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கே.என்.குப்பத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகனின் மாமனார் ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் கு. ராமநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி கே..என். குப்பத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டதலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்க. சிந்தனைச்செல்வன் முன்னிலையில் மாவட்ட காப்பாளர் சி.காமராஜ் படத்தினை திறந்துவைத்தார்.அனைவரும் மலர்தூவி இரங்கல் தெரிவித்தனர். பெரியார் உலக நிதியாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை தலைமை செயற்குழு உறுப்பிினர் சிந்தனைச் செல்வனிடம் தியாக. முருகன் குடும்பத்தினர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரத்தின ராமச்சந்திரன் . மாவட்டத் துணைச் செயலாளர் க. கார்த்திக்,மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு ராஜா, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.கருணாநிதி, அரியலூர் ஒன்றியத்தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா, ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன், நகர தலைவர் சுந்தரம் நகர செயலாளர் டி.எஸ்.கே அண்ணாமலை ,நகர அமைப்பாளர் டைல்ஸ்’ பட்டுசாமி, ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை பிரபாகரன், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி இராமச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன்,ஆண்டிமடம் சுந்தரமூர்த்தி, ஜெயங்கொ கொண்டம் ராஜன், சந்தானம்உள்ளிட்ட பொறுப்பாளர்களும் – தோழர்களும் உறவினர்களும் திரளாக பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *