கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

24.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேர்தலுக்காக பணத்தை வாங்கிட்டாங்க… மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதிக்கும் அமெரிக்க அதிபர்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தந்தை பெரியார் பெயரில் புதிய மருத்துவமனை.
* வழக்குரைஞர் சட்ட திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.
* பாளையங்கோட்டை, பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகைகளில் இருந்து ஹிந்தி பெயர் அழிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டைப் போல, பல்கலைக்கழக துணைவேந்தர்களாக ஆளுநருக்கு பதில் முதலமைச்சர் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று மசோதாக்களை கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
தி இந்து:
* ராஜஸ்தான் வேளாண் அமைச்சர் கிரோடி லால் மீனா தனது தொலைபேசி ஒட்டுக கேட்கப்படுவதாகவும், அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் பாஜக அரசு மீது குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கை களான, கிரீமிலேயர் முறை நீக்கம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீதித்துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மனு மீது நடவடிக்கை எடுத்திட ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அறிவுறுத்தல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கடந்த ஆண்டு போலி ஆசிரியர் சர்ச்சையைத் தொடர்ந்து, 2025-2026 ஆம் ஆண்டிற்கான இணைப்பு வழங்குவதற்காக அண்ணா பல்கலைக் கழகம் மாநிலத்தில் உள்ள அனைத்து 440 பொறியியல் கல்லூரிகளையும் ஆய்வு செய்ய முடிவு.
* சென்னை கீழ்பாக்கம் பாரதிய வித்யா பவனில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவனை அடித்ததற்காக ஹிந்தி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *