சென்னை, பிப்.24- கொளத்தூர் தொகுதியில் ரூ.210கோடியில் கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்படுகிறது. இந்த மருத்துவமனையை விரை வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பெரியார் நகர் மருத்துவமனை
கொளத்தூர் தொகுதி. பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவ மனை சிறப்பு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் 6 தளங்களு டன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கை கள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவு கள், முதல் தளத்தில் மகப் பேறு பிரிவு, அறுவை அரங் கங்கள், நவீன ரத்த வங்கி அமைக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் ஆய்வு
இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கான மருத்துவப் பிரிவு கள், மூன்றாம் தளத்தில் மகப் பேறு மற்றும் குடும்ப கட்டுப் பாடு வார்டு, நான்காம் தளத் தில் ஆண்கள் பொது மருத்து வப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, அய்ந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவு களுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட் டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு “பெரியார் அரசு மருத்துவமனை” என்று பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டு உள்ளார். விரைவில் இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
மாணவ மாணவிகளுடன் உரை
இதற்கிடையே சென்னை, கொளத் தூர், ஜெகநாதன் தெருவில் அனைத்து உள்கட் டமைப்பு வசதிகளுடன் கட் டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பகிர்ந்த பணியி டத்தில் பணி புரிவோர்களிடம் (கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ்) அவர் உரையா டினார்.
2.85 கோடி ரூபாய் செல வில் இந்த முதல்வர் படைப்ப கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு (2024) நவம்பர் 4-ஆம் தேதி திறந்து வைத்தார் என் பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரம ணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, எம்.பி.க்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர் கள் உடன் இருந்தனர்.