விடுதலை போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் அறிவிப்பு

Viduthalai
3 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 15-தகைசால் தமிழர் – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா  மறை வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு,

தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா  மறைந்த செய்தி யால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட் டுக்காகவும், உழைக்கும் வர்க் கத்துக்காகவும், தமிழ் மண்ணுக் காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும் தியாகமும் என் றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

மதுரை அமெரிக்கன் கல் லூரி மாணவராக இருந்த போதே விடுதலை வேட்கை யோடு மாணவர் சங்கச் செய லாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா . அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பல முறை சிறையில் அடைக்கப் பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவ தற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப் பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக் கூட கரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யா அவர்களின் மாண் பால் நெகிழ்ந்து போனேன்.

தோழர் சங்கரய்யா  ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினரா கவும் திகழ்ந்து நினைவுகூரத் தக்க பல பணிகளை ஆற்றியவர். தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா, தலைவர் கலைஞர் மறைவுற்றபோது, அவரது இறுதிப்பயணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக் குமான நட்பைப் பறைசாற்றி யது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யிலும் அதன் பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலு மாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப் பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல் பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வர லாற்றில் அவரது தவிர்க்க முடி யாத ஆளுமையை வெளிக் காட்டும்.

பொதுத் தொண்டே வாழ்க் கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப் படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறி யாத – குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந் தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.

தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா . சிறப்புக ளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக் காரர் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு எப் போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுப வமும் வழிகாட்டலும் இன் னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.

ஜாதி, வர்க்கம், அடக்கு முறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய் யாவை இழந்து தவிக்கும் அவ ரது குடும்பத்தினர், பொதுவு டைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங் களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீர ராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும். – இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *