நடிகை விஜயலட்சுமி புகார் சீமான் மீது விரைவில் குற்றப் பத்திரிகை

2 Min Read

சென்னை,பிப்.24- தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சீமானை மீண்டும் விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சீமானுக்கு எதிராக புகார்

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011இல் புகார் அளி்த்திருந்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிராக கடந்த 2011இல் அளித்த பாலியல் புகாரை 2012இல் திரும்பப்பெறுவதாக எழுதிக் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கை காவல் துறையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். எனவே விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ரத்து செய்ய முடியாது

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘சிலரது தூண்டுதல் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘நடிகை விஜயலட்சுமியும், சீமானும் 2008ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்தில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர்.

ஆனால் தாலி கட்டவில்லை. தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதன் காரணமாகவே விஜயலட்சுமி, சீமானுடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர், அவர் அளித்த பாலியல் புகாரை சிலர் அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே திரும்பப் பெற்றார். அவராகவே மனமுவந்து திரும்பப் பெறவில்லை. எனவே, சீமானுக்கு எதிரான இந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக்கூடாது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘அப்படியென்றால் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு முதல் மனைவியா” என கேள்வி எழுப்பியதோடு “இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் காவல் துறையினர் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் மீண்டும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக சீமானுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பி அவரை அழைத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *