பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

viduthalai
1 Min Read

மதுரை,பிப்.24- மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்கக் கூடாது. கோயில் உள்ள சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும். உரிய பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் விவேகா சுரேஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து
அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!!

சென்னை,பிப்.24- அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரசு ஊழியர்கள் அறிவித்திருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஊதிய முரண்களை களைய வேண்டும்; சிறப்பு காலமுறை, மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *