முக்கிய வேண்டுகோள்

1 Min Read

மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கும்
முக்கிய வேண்டுகோள்

அருமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே,
திராவிடர் கழகப் பொதுக் குழு சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கால கட்டத்திற்கு கழகம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், கடமை உணர்வுகள் பற்றி கழகத் தலைவர் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாவட்டக் கழக நிர்வாகிகள் தத்தம் மாவட்டக் கழகக் கலந்துரையாடலை உடனடியாக நடத்தி, சிதம்பரம் பொதுக் குழுவில் எடுத்த முடிவுகளை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்களும், பொறுப்பு மாவட்டங்களின் பொதுச் செயலாளரும் இப்பணிகள் நடைபெற ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
பிரச்சாரத்தோடு புதிய கிளைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியும் முக்கியமானது. பிரச்சாரக் கூட்டங்களைப் புதிய இடங்களில், புதிய ஊர்களில் நடத்திடவும் கேட்டுக் கொள்கிறோம்.

– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *