குறுகிய காலத்தில் பெரும் வருமானம் என்ற விளம்பரங்கள்
காவல்துறை எச்சரிக்கை!
சென்னை,பிப்.23- சைபர் நிதி மோசடி மற்றும் அதன் தடுப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் மற்றும் கூட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாட்டின் 30 வங்கிகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு சமீபத்தில் ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தியுள்ளது.
சைபர் கிரைம் பிரிவு மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத் தவும் இடைவெளிகளை நிவர்த்தி செய்யவும், இந்த சந்திப்பு உதவியது. இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் மிட்டல், தலைமையில், இணையவழி குற்றப்பிரிவின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகளை முடக்குவது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதில் உள்ள சிரமங்கள், விழிப்புணர்வு ஊக்குவிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தளமாக இந்த கூட்டம் அமைந்தது.
பொதுமக்களுக்கான ஆலோசனை
1. டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை.
2. குறுகிய காலத்தில் பெரும் வருமானம் என்ற விளம்பரங்கள் போலியானதாகவே இருக்கும். அதனை நம்பி ஏமாற வேண்டாம்.
3. எந்த இணைப்புகளையும் கிளிக் செய்வதற்கு முன் அதைச் சரிபார்த்து, பின் தொடரவும்.
4.உங்கள் கணக்கைச் சரிபார்த்தல், கடவுச்சொல்லை மீட்டமைத்தல் அல்லது பணத்தைப் பரிமாற்றுதல் போன்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மின்னஞ்சல் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள்
5. உங்கள் கடவுச்சொல்லைத் தவிர உங்கள் மின்னஞ்சல் கணக்குடன் இரு காரணி அங்கீகாரத்தை (CIAL இயக்கவும். வலுவான மற்றும் சிக்கலான கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
புகார் அளிக்க
நீங்கள் இதேபோன்ற மோசடி நடவடிக்கைக்கு ஆளானீர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். சைபர் கிரைம் உதவி அழைப்பு எண் 1910அய் டயல் செய்வதன் மூலம் சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகாரைப் பதிவு செய்யவும்.