பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

viduthalai
1 Min Read

வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு (Anti Drug Committee) ஏற்படுத்தப்பட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
19.02.2025 அன்று பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலுள்ள ஒலி, ஒளி அரங்கில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு (Anti Drug Awareness Programme) நடைபெற்றது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு முதுநிலை விரிவுரையாளர் ஆர.அய்யநாதன் பல்வேறு போதைப் பொருட்கள் பற்றியும், அதனால் இளைஞர் சமுதாயம் எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றியும் பவர் பாயிண்ட் படங்களுடன் சிறப்புரை ஆற்றினார்.
இப்பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியை பு.செங்கொடி வரவேற்புரை வழங்கினார். போதைப் பொருள் தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.விவேக் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *