பெரியார் பாலிடெக்னிக் பெற்ற மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்டத்தில் – இரு பெரும் விருதுகள்

viduthalai
1 Min Read

வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பான செயல்பாடுகளுக்காக இப்பாலிடெக்னிக் கல்லூரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.

மாநில அளவிலான
சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது

2015-2016 ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் இரா.மணிவண்ணன் தமிழ்நாடு அரசின் “மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்” (2015 – 2016) விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 18.02.2025 அன்று சென்னை கல்லூரி கல்வி இயக்குனரக வளாக அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சென்னை கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவள்ளி, இப்பெருமைமிகு விருதினை வழங்க இக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இரா.மணிவண்ணன் பெற்றுக் கொண்டார்.

மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர் விருது

மேலும் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை மாணவர் செல்வன்
எஸ்.அப்துல் பாசித் 2015-2016 ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காF தமிழ்நாடு அரசின் “மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்” (2015 – 2016) விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 18.02.2025 அன்று சென்னை கல்லூரி கல்வி இணை இயக்குநர் விருதினை வழங்கினார். இப்பெருமை மிகு விருதினை பெற்ற பேராசிரியர் மற்றும் மாணவரை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *