அன்னை மணியம்மையார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடுவோம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

viduthalai
1 Min Read

நாகர்கோவில், பிப். 23- குமரிமாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.

திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேக ரன், திராவிடர் கழக சொற் பொழிவாளர் அதிரடி க. அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக ஒன்றிய செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன், மாவட்ட கழக துணைத்தலைவர் ச. நல்ல பெருமாள் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கோட் டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், டாக்டர் கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். கழக காப்பாளர் ம.தயாளன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்

கழகத் தோழர் கலைச்செல்வனின் தாயார் சீலாவதி அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது, சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர்கழகப் பொதுக் குழு தீர்மானங்களை முழு மனதாக ஏற்று வரவேற்று குமரிமாவட்டத்தில் செயல் படுத்துவது, திராவிடர் கழக மேனாள் தலைவர் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்துவது, ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப் பாட்டம் நடத்துவது, வாணியக்குடி கிராமத்தில் மீன் பிடித்துறை முகப் பணியினை உடனே தொடங்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது, குமரிமாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது, உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *