ஈரோடு, பிப். 23- 21.02.2025 அன்று மாலை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர் விவேக் ராஜேந்திரன் “உலகளக்கும்தமிழ் மாணவர்கள்” என்ற தலைப்பில்உரையாற்றினார்.
தொடர்ச்சியாக மகளிர் மட்டுமே முன்னின்று “வர்ணாசிரமம்” என்ற சிறப்பு நாடகத்தை நடத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். அதில் கனிமொழி , லீலா, கவிதா, ஆனந்தி ,சசி ,ஜோதி, ஆகியோர் முதன்முதலாகசிறப்பாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர்சிறப்புரையாற்றினார். “என்றும் தமிழ்நாடு பெரியார் நாடே ” என்ற தலைப்பில் “தந்தை பெரியாரின் பெண்ணுரிமை, மனித நேயம், ஜாதி – மத ஒழிப்பு இவைகளைப் பற்றியும் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர மறுக்கும் மோடியின் பிஜேபி ஆட்சியை கண்டித்தும், ஹிந்தித் திணிப்பைக் கண்டித்தும் சிறப்பாக விளக்க உரையாற்றினார்.
பள்ளி மாணவி நதீரா இணைப்புரை வழங்கினார். கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், மாவட்ட தி.மு.க பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர்கள் வி.சி.நடராஜன், குறிஞ்சி தண்டபாணி, அக்னி சந்துரு, செகதீசன் (எம்.சி.), மாநில தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன், மாவட்ட கழக செயலாளர் மா.மணிமாறன், பேரா. ப.காளிமுத்து, ப.சத்தியமூர்த்தி, கு. சிற்றரசு, கண குறிஞ்சி, ராஜேந்திர பிரபு, தே.காமராஜ், பொன் முகிலன், கோவிந்தன், அன்பரசு, அன்பெழில், நர்மதா, கி. பிரபு, வீ.மா. ஆறுமுகம் மற்றும் திரளான பொதுமக்கள் – மகளிர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பெரியார் படிப்பக வாசகர் வட்ட பொருளாளர் ஆனந்தலட்சுமி நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.