ரயிலில் செல்ல பணம் இல்லாமல் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்தும், கழுதை வண்டிகளின் மீது அமர்ந்தும், சரக்கு வாகனங்களிலும், ஊர் பொது டிராக்டர்களிலும் பயணப்பட்டு கும்பமேளா வருபவர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் உடைமைகளை சுருட்டிகொண்டு மற்றும் உணவிற்காக வயல்வெளிகளில் விளைந்த முள்ளங்கி மற்றும் பலரிடம் வாங்கிய கோதுமை உள்ளிட்ட பல மாவுகளின் கலவையில் ரொட்டி செய்து அதன்கூட வெங்காயத்தையும் மிளகாயையும் கடித்து தின்று கும்பமேளாவிற்கு வந்த மக்கள் மூலமாக 3 லட்சம் கோடி வருவாய் என்று யோகி ஆதித்யநாத் கூறுகிறார். இவர் தான் கடந்த 19 ஆம் தேதி இந்தியாவின் கிட்டத்தட்ட அரைவாசி மக்கள் தொகை 57 கோடி பேர் கும்பமேளாவிற்கு வந்து சென்றுள்ளனர் என்றார். 57 கோடி பேர் முழுக்குப் போட்டார்கள் என்பதை நம்புபவர்கள் இந்த ரூ.3 லட்சம் கோடியையும் நம்பலாம்!