ரயிலில் செல்ல பணம் இல்லாமல் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்தும், கழுதை வண்டிகளின் மீது அமர்ந்தும், சரக்கு வாகனங்களிலும், ஊர் பொது டிராக்டர்களிலும் பயணப்பட்டு கும்பமேளா வருபவர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் உடைமைகளை சுருட்டிகொண்டு மற்றும் உணவிற்காக வயல்வெளிகளில் விளைந்த முள்ளங்கி மற்றும் பலரிடம் வாங்கிய கோதுமை உள்ளிட்ட பல மாவுகளின் கலவையில் ரொட்டி செய்து அதன்கூட வெங்காயத்தையும் மிளகாயையும் கடித்து தின்று கும்பமேளாவிற்கு வந்த மக்கள் மூலமாக 3 லட்சம் கோடி வருவாய் என்று யோகி ஆதித்யநாத் கூறுகிறார். இவர் தான் கடந்த 19 ஆம் தேதி இந்தியாவின் கிட்டத்தட்ட அரைவாசி மக்கள் தொகை 57 கோடி பேர் கும்பமேளாவிற்கு வந்து சென்றுள்ளனர் என்றார். 57 கோடி பேர் முழுக்குப் போட்டார்கள் என்பதை நம்புபவர்கள் இந்த ரூ.3 லட்சம் கோடியையும் நம்பலாம்!
நம்ப முடிகிறதா?
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books