ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – காங்கிரசார் அமைதிப் போராட்டம்

2 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஜூலை 13 ராகுல்காந்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக் கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென் னையில் காங்கிரசார் நேற்று (12.7.2023)அமைதிப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.  ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து அவரது நாடாளுமன்ர உறுப்பினர் பதவி பறி போனது. இதனை கண்டித்து கட்சி சார் பில் பல்வேறு போராட்டங்கள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி மவுன போராட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங் கினார். இதில் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம்,  நாடாளுமன்ற உறுப் பினர். ரஞ்சன்குமார் உள்பட மாவட்ட தலை வர்கள் முன்னிலை வகித்தனர். போராட்டம் தொடர்பாக திருநாவுக் கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி 10 நிமிடங்கள் ஆற்றிய உரை, பா.ஜ.க. ஆட்சியையும், அக்கட்சியையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ராகுல்காந்தி சொன்ன அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரை மீண்டும் நாடாளுமன்றத்தில் உரையாற்ற விடாமல் தடுப்பதற்காக பழைய வழக்கை எடுத்து, நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்தனர். இதனை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக சந்தித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்படும். இதில் ராகுல்காந்திக்கு நீதி கிடைக்கும். எனவே அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய சூழல் உருவாகும். அவர்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர். ராகுல்காந்திதான் பிரதமராக வருவார். இவ்வாறு அவர் கூறினார். 

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, துணை தலை வர்கள் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜய் வசந்த் எம்.பி., பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சூளை ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட ஏராளமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *