சென்னை மாநில கல்லூரியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்

viduthalai
1 Min Read

சென்னை மாநில கல்லூரியில் பிப்.21இல் திராவிட மாணவர் கழகம் சார்பில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யு.ஜி.சி.யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையின் ஆபத்துகள் பற்றியும் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிப் . 23 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கும், பிப். 25 ஆம் தேதி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடன் திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் தொண்டறம் மற்றும் வட சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச. சஞ்சய் ஆகியோர் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *