சென்னை மாநில கல்லூரியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்

1 Min Read

சென்னை மாநில கல்லூரியில் பிப்.21இல் திராவிட மாணவர் கழகம் சார்பில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யு.ஜி.சி.யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையின் ஆபத்துகள் பற்றியும் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிப் . 23 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கும், பிப். 25 ஆம் தேதி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடன் திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் தொண்டறம் மற்றும் வட சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச. சஞ்சய் ஆகியோர் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *