பெரியார் விடுக்கும் வினா! (1573)

Viduthalai
0 Min Read

நம் மக்களுக்கு ஒரு ஸ்தாபனம் தேவை என்பதன் அவசியத்தைக் குறித்துதான் திராவிடர் கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இக்கழகத்துக்காக ஏற்பட்டுள்ள இந்தக் கொடியில் நம் சமுதாயத்திலுள்ள இழிவைக் குறிக்கும் அறிகுறியாகவே கருப்பு நிறத்தை வைத்துள்ளோம். நமது இழிவு ஒழிந்தவுடன் நமது கொடியும் மாறும். ஆகவே திராவிடர் கழகமே நாட்டில் நம்முடைய சமுதாய மக்களுக்கே பாடுபடும் ஒரு ஸ்தாபனமன்றி, இயக்கமன்றி, பார்ப்பனர்களுக்கு கைக்கூலியாகவும், ஏஜெண்டாகவும் உள்ள சில கட்சிகளைப் போல் ஆகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *