அமைச்சர் கோவி. செழியன்
திருவனந்தபுரம், பிப்.22 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 20.2.2025 அன்று பல்கலைக்கழக மானி யக்குழுவின் வரைவு நெறிமுறைகள் 2025, குறித்த தேசிய மாநாடு நடை பெற் றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாநில சுயாட்சி
யூஜிசி நெறிமுறைகள் குறித்த இந்த முக்கியமான மாநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்துரைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கல்வி, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னணியில் உள்ளது. கல்வியானது மாணவர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகளாக வெளி யிடப்பட்டுள்ள இந்த சமீபத்திய வரைவு நெறிமுறைகள் வருங்காலத்தில் மாநிலத்தின் சுயாட்சியினை முழுவது மாக பறிக்கும் வகையில் உள்ளது.
ஒன்றிய-மாநில உறவுகளில் மாநில அரசின் உரிமைகளில் கடுமையான தாக்குதலை ஏற்படுத்துகிறது. யூஜிசி சட்டம், 1956-இன் பிரிவு 26-இன் கீழ், உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வெளிட்ட இந்த நெறிமுறைகள் மாநிலப் பல் கலைக்கழகச் சட்டங்களை செயல் பாடற்றதாக ஆக்கும் நோக்கம் கொண் டது. வரைவு யூஜிசி நெறிமுறைகள் ஒரு வழிமுறைகளே ஆகும்.
வரைவு யூஜிசி விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சி யூஜிசி-யின் அத்துமீறலைத் தவிர வேறில்லை. சட்டப் பிரிவு 12டி-இன் கீழ், யூஜிசி-இன் அதிகாரங்கள் வெறும் பரிந்துரை மட்டுமே. யூஜிசி உயர் கல்வியில் தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால், அது மாநிலங்களை கட்டாயப்படுத்தி அமல்படுத்த முடியாது. இந்த வரைவு விதிமுறைகள், அதிகாரப் பிரிவினை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டும் அரசமைப்பின் ‘அடிப்படை அம்சங்களாக’ இருப்பதை சீரழிப்பதற்கான ஒரு முயற்சி. கல்வி நமது அரசமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது.
இந்த யூஜிசி வரைவு நெறிமுறைகள் பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான முயற்சியாக இல்லை. இந்த விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், பிரதிநிதித்துவ சட்டத்தின் போர்வையில் தள்ளப் படுகின்றன. மாண்பமை உச்சநீதி மன்றத்தில் கல்யாணி மதிவாணன் என்பவருக்கு எதிராக கே.வி. ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில், யூஜிசி விதிமுறைகளை அரசு ஏற்காத பட்சத்தில் மாநிலப் பல்கலைக் கழகங்கள் கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்று தீர்ப்பளித்தது.
அறிவியல் காரணம் இல்லை
எனவே, விதிமுறைகளை வகுப் பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களின் சம்மதம் மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த விதிகளுக்குப் பின்னால் தெளிவான அறிவியல் காரணம் இல்லை. எந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் இல்லை. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு ஏதேனும் நிபுணர்களை கலந் தாலோசித்ததா அல்லது மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுப்பிய உண்மையான சந்தேகங்களை நிவர்த்தி செய்ததா என்பதும் தெளிவாக இல்லை. யூஜிசி மற்றும் தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள், நமது நாட்டிற்கு அதன் பொருத்தம் மற்றும் பயனைப் பற்றி எந்த சிந்தனையையும் பயன் படுத்தாமல் மேற்கத்தியத்தை நகலெடுப்பதாகத் தெரிகிறது. இந்த வரைவு விதிமுறைகள், கல்வித் தரம் குறித்த மேலோட்டமான கருத்தை முன்மொழிகிறது. எந்த விதமான தேவை மதிப்பீடு அல்லது அறிவியல் அடிப்படையின்றி ஏற்கனவே நிறுவப் பட்ட நடைமுறைகளை சிதைக்கும் முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.