‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்

1 Min Read

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ (இரண்டு பாகம்) நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பெற்றுக்கொண்டார். உடன் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம், தி.மு.க.வின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
தி.மு.க. மாணவரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர் கி.நடராசன், தி.சிற்றரசு (நக்கீரன் பதிப்பகம்) சென்னை, கலைஞர் அரங்கம், 22.2.2025.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *