ராமேசுவரம், பிப்.21 மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தனர்.
அடுத்தடுத்து மீனவர்கள் கைது
ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பகுதியில் 19.2.2025 அன்று இரவு சிறைப்பிடித்து படகுகளிலிருந்த ஜோதிராஜன், ராமு, அருள்ஜார், ஜான் கென்னடி ஆகிய 4 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.மேலும் ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மறுநாள் 20.2.2025 அன்று அதி காலை சிறைப்பிடித்தனர். இந்தப் படகுகளிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல் ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
99 மீனவர்கள் சிறைப்பிடிப்பு
தமிழ்நாடு மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தி லிருந்து 13 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு 99 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.