தண்ணீர் சுரக்கும் செயற்கை “மரம்!”

1 Min Read

அரசியல்

குடிக்க சொட்டுத் தண்ணீர் கிடைக்காத இடத்தில் கூட, அசுத்தமடைந்த நீர் கிடைப்பது விந்தை தான். அதேபோல காற்றில், குறிப்பாக இரவு நேரக் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்கிறது. இந்த இரண்டையும் வைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

பாலைவனத்தில் கள்ளிச் செடிகள் எப்படி காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன என்பதை கவனித்து, அதே போல, நேனோ பரப்புகளை கொண்ட, நுண் மரம் போன்ற அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஹைட்ரோ ஜெல்லால் ஆன இந்த அமைப்பு, பகலில் சூரிய வெப்பத்தை உள்வாங்கி, அடிப்பகுதியில் உள்ள நீரை ஆவியாக்கி, அந்த ஆவியை ஒரு கலனில் குளிர்வித்து தூய நீராக மாற்றித் தருகிறது.இந்த அமைப்பின் மேற்போர்வையை நீக்கி னால், இரவில், காற்றிலுள்ள நீர் திவலைகளை ஈர்த்து சேகரித்து தருகிறது.

புதுமையான நுண் மரம், 1 சதுர மீட்டருக்கு, ஒரு நாளைக்கு, 34 லிட்டர் துய தண்ணீரை செலவின்றி சேமித்து தரும். எனவே தான் இதை, ‘தண்ணீர் சுரக்கும் மரம்’ என, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *