தமி்ழ்நாடு மாநில ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல உலகப் புகழ்பெற்ற புதினப் படைப்பாளர் இணையற்ற எழுத்துச் செம்மல், மானமிகு தோழர் இைமயம் அவர்களுக்கும், அவருடன் நியமனத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் பெருமக்களுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஏற்கெனவே தலைவராகப் பொறுப்பேற்று பணி நிறைவு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை தமிழ்வாணன் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்!
திட்டமிட்டுப் பரப்பப்படும் பல விஷமச் செய்திகளை உடனுக்குடன் ஆய்ந்து, பொய்மையின் முகத்திரையைக் கிழித்து, வாய்மையை நிலை நிறுத்திடுவது கடமை என்று உழைத்து சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.2.2025