காளானிலிருந்து செயற்கைத் தோல்: விஞ்ஞானிகள் சாதனை

1 Min Read

அரசியல்

பின்லாந்து விஞ்ஞானிகள், காளான் மூலம் செயற் கைத் தோலை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளனர். சில தாவரங்களை வைத்து தோலைப் போன்ற பொருளை தயாரிக்கும் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

பின்லாந்திலுள்ள வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மய்யத்தின் விஞ்ஞானிகள், காளான் மற்றும் பூஞ்சை களிலிருந்து தோல் போன்றே ஒரு பொருளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

காளான் தோலைத் தொட்டால் நிஜமான விலங்குத் தோலைத் தொடுவது போன்ற உணர்வைத் தருவதுடன், பலவித சாயங்களில் அதை தோய்த்து எடுத்து அசத்த வும் முடியும்.

பிரமாண்டமான உயிரிக் கலன்களில், பூஞ்சைகள் மற்றும் காளான்களை விஞ்ஞானிகள் நொதிக்க வைக் கின்றனர். இத்தகைய திரவ நொதித்தல் முறையில் காளான்களை பதப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் செயற்கைத் தோல் உற்பத்தியைச் செய்ய முடியும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் காட்டி யுள்ளனர்.

இதனால், துணி போல நீண்ட தோல்களை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்ய முடியும். இயற்கையான விலங்குத் தோலினை துண்டு துண்டாகவே பதப்படுத்தி தயாரிக்க முடியும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப் படும் தோலை விரயமாகாமல், பல பொருட்களை தயாரிக்க உதவும்.

மேலும், காளான் தோலை தயாரிக்க எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை. தவிர, நச்சுள்ள வேதிப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தும் தேவை இல்லை. இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இருக்காது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *