வல்லம், பெரியார் பாலிடெக்னிக் மற்றும் சென்னை அய்.சி.டி அகாடமி இணைந்து நடத்தும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

1 Min Read

வல்லம்,பிப்.20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்தும் இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 17.02.2025 முதல் 21.02.2025 வரை நடைபெறுகின்ற பைத்தான் புரோக்கிராமிங் (Python Programming) என்ற தலைப்பிலான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியின் துவக்க விழா 17.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 30 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை துவக்கி வைத்து, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா உரையாற்றினார். இக்கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் ஆர்.அய்யநாதன் வரவேற்புரை வழங்கினார். Information and Communication Technology (ICT, Chennai) அகாடமியின் பயிற்றுநர்கள் செல்வி. அம்பிகா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பயிற்சி பற்றிய சுருக்க உரை ஆற்றினார்கள். விழாவில் கணினித்துறை தலைவர் எம்.சண்முகப்பிரியா நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *