சென்னை, பிப்.20 தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் பிப்.25-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நிதியமைச்சர் தங்கம் தென் னரசு, பல்வேறு துறைகளின் வல்லு நர்கள், பொதுமக்கள், தொழில் நிறு வனங்கள், வர்த்தக அமைப்புகள், வணிக அமைப்புகளிடம் கடந்த 2 தினங்களாக கருத்துகளை கேட்டு வருகிறார்.
அமைச்சரவை
இந்நிலையில், தமிழ்நாடு அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்களுக்கும், தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்ப தால் புதிய அறிவிப்புகளுக்கும் ஒப் புதல் வழங்கப்படும் என தெரிகிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள், மாணவர்கள் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மும்மொழிக் கொள்கை பிரச்சினை, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
Leave a Comment