சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி அருகே நடைமேடையில் கட்டப்பட்ட கோயில் அகற்ற கோரிக்கை

1 Min Read

வணக்கம். சென்னை அண்ணா நகர், பழைய சிந்தாமணி அங்காடி எதிரே, வள்ளியம்மாள் பள்ளி வளாகம் ஒட்டி சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நடைமேடை, பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.
தற்போது இந்த நடைமேடையில், வழியை மறித்து, ஒரு கோயில் கட்டப்பட்டு, உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நடைமேடையை பயன்படுத்த முடியாமல், போக்குவரத்து வாகனங்கள் செல்லும் பாதையில் நடந்து செல்லும் அபாய நிலை உருவாகி உள்ளது.

நடைபாதையில் மக்களுக்கு இடையூறாக உள்ள கட்டடங்கள், கோவில்கள் அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும் என நீதிமன்றங்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், தீர்ப்பளித்தும் உள்ளன.
ஆகவே, இதனை கருத்தில் கொண்டு, அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி வளாகத்தை ஒட்டி (பழைய சிந்தாமணி கூட்டுறவு அங்காடி எதிரே) சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்றி, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள்,

கோ.கருணாநிதி
9381007998
நகல்: பெருநகர சென்னை மாநகர மேயர், சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *