பைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.20 தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக் கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மாநாடு

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண் டலம் சார்பில், ‘எதிர்கால வேலை உச்சி மாநாடு-2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
மக்கள் தொகை அடிப் படையில் இன்று உலகில் 6-இல் ஒருவர் மட்டுமே இந்தியராக இருந்தாலும், அடுத்த 20 ஆண்டுகளில், உலகில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கையில் நான்கில் ஒருவராக இந்தியர் இருப்பார். ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் இந்தியர்கள் சுமார் 11 சதவீதம் பேர் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.

மேலும், கல்விச் சேர்க்கையில் செய்யப்பட் டுள்ள பெரும் பங்களிப்பு காரணமாக, தமிழ்நாடு அதிக அளவில் பயன் பெறும். கனடா, ஆஸ்திரே லியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைந்து, பொருளாதார நிலை மேம்பட்டு வருவது, திறமையாளர்களின் இடப் பெயர்வை ஊக்குவிக்கும்.

வெளிநாடுகளில் வேலைக்கு போதுமான ஆட்கள் இல்லாத காரணத் தால், பிற நாட்டினர் அங்கு வேலைக்கு செல்ல வழிவகுக்கும். இதனால், இந்தியாவும், தமிழ்நாடு பயன்பெறும்.

ஃபைபர் நெட் திட்டம்

ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் நகரங்கள் ஏற்கெ னவே நன்கு இணைக்கப்பட் டுள்ளன. தமிழ்நாடு ஃபைபர்நெட் திட்டத் தின் கீழ், ஒன்றிய அர சின் பாரத்நெட் திட்டத் தின் ஆதரவுடன் தமிழ் நாட்டின் 12 ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமங் களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், சிறந்த இணைய இணைப்புடன் நிறைய வேலைகள் தொலைதூரத்தில் நடக் கும். இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *