கிருஷ்ணகிரி, பிப்.20 மும்மொழிக் கொள் கையை அதிமுக எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித் துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
கண்டிக்கத்தக்கது
அமெரிக்காவில் இருக் கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளி யேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடி யாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.
குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பதில் சொல்லி இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிர தமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளி யிட்டதற்காக இணைய தளத்தை முடக்கு கிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதி காரத்தை வெளி காட்டுகிறது.
தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழ் நாட்டுக்கு முழுமையான நிதி ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு ஹிந்தி பேசாத மாநிலங்களை முழு வதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது. அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர் களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.