கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

19.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் நடத்த தயார்: ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்.
தி இந்து:
* புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது மற்றும் அநாகரீகமானது, – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
* மோடியைப் பற்றி கார்ட்டூனைத் தொடர்ந்து, விகடன் பத்திரிகையின் வலைத்தளம் இந்தியாவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தொலைத் தொடர்புத் துறைக்கு (DOT) பரிந்துரை மூலம் முடக்கப்பட்டது.
* தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர் பான சட்டத்திற்கு எதிரான மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்
* தொலைநோக்கற்ற மற்றும் கொள்கையற்ற நரேந்திர மோடி அரசாங்கம் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது” என மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.
* ராஜஸ்தான் பள்ளிகளில் உருது மொழியை சமஸ்கிருதத்துடன் மாற்றுவது குறித்து எதிர்ப்பு; போதுமான எண்ணிக்கையிலான மாணவர்கள் இல்லாததால் கல்வித் துறை காரணம் என அரசு விளக்கம். (தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியை வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக படிக்கலாம் என ஒன்றிய அரசின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது)
தி டெலிகிராப்:
* ‘பிரதமர் மோடி பொறுப்பேற்றிருந்தால், இந்த மக்கள் கண்ணியத்துடன் திரும்பி வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பொறுப்பேற்கவில்லை. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட இந்திய குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடியின் ‘மவுனம்’ குறித்து மம்தா கேள்வி.
* வாக்காளர் வாக்குப்பதிவில் (டோகே) DOGE மானியம் வழங்கப்படுவதாக பாஜக காங்கிரஸை சாடிய நிலையில், பணமதிப்பிழப்பு முடிவில் அமெரிக்காவின் பங்கு குறித்த கட்சியின் நிலைப் பாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பி யுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூர் முருகன் கோயிலில் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சர்கர்கள், குடமுழுக்கு விழாக்களில் இருந்து தங்களை விலக்கி வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

 

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *