19.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் நடத்த தயார்: ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்.
தி இந்து:
* புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது மற்றும் அநாகரீகமானது, – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
* மோடியைப் பற்றி கார்ட்டூனைத் தொடர்ந்து, விகடன் பத்திரிகையின் வலைத்தளம் இந்தியாவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தொலைத் தொடர்புத் துறைக்கு (DOT) பரிந்துரை மூலம் முடக்கப்பட்டது.
* தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர் பான சட்டத்திற்கு எதிரான மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்
* தொலைநோக்கற்ற மற்றும் கொள்கையற்ற நரேந்திர மோடி அரசாங்கம் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது” என மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.
* ராஜஸ்தான் பள்ளிகளில் உருது மொழியை சமஸ்கிருதத்துடன் மாற்றுவது குறித்து எதிர்ப்பு; போதுமான எண்ணிக்கையிலான மாணவர்கள் இல்லாததால் கல்வித் துறை காரணம் என அரசு விளக்கம். (தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியை வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக படிக்கலாம் என ஒன்றிய அரசின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது)
தி டெலிகிராப்:
* ‘பிரதமர் மோடி பொறுப்பேற்றிருந்தால், இந்த மக்கள் கண்ணியத்துடன் திரும்பி வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பொறுப்பேற்கவில்லை. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட இந்திய குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடியின் ‘மவுனம்’ குறித்து மம்தா கேள்வி.
* வாக்காளர் வாக்குப்பதிவில் (டோகே) DOGE மானியம் வழங்கப்படுவதாக பாஜக காங்கிரஸை சாடிய நிலையில், பணமதிப்பிழப்பு முடிவில் அமெரிக்காவின் பங்கு குறித்த கட்சியின் நிலைப் பாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பி யுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூர் முருகன் கோயிலில் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சர்கர்கள், குடமுழுக்கு விழாக்களில் இருந்து தங்களை விலக்கி வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
.- குடந்தை கருணா