பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!

1 Min Read

வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது! பெரியாரே வெல்வார்! என மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறினார்.
கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு 16. 2 .2025 ஞாயிறு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடலூர் பேருந்து நிலையத்தில் வட்டார செயலாளர் மணிவாசகம் வரவேற்புரை ஆற்றிட வட்டார செயலாளர் மு ஆனந்தி தலைமை தாங்கிட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் பாலு ஒருங்கிணைப்பு செய்தார்.
கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “மக்கள் அதிகாரம் மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர்களை வாழ்த்தியும் மாநாட்டின் தீர்மானங்கள் நோக்கங்கள் நிறைவேறிட வாழ்த்தியும், பெரியாரே வெல்வார் எந்த சக்தியாலும் தந்தை பெரியாரை மக்களுடைய உள்ளத்தில் இருந்து அகற்ற முடியாது” என் பதை மய்யப்படுத்தி கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை/சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நோக்க உரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் மாதவன், சரவணன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் மார்பன், புரட்சிகர மாண வர் அணி பால்ராஜ், ராஜ சங்கர், மணிகண்டன், செந்தாமரை கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் வடலூர் கழக அமைப்பாளர் முருகன், வடகுத்து பெரியார் படிப்பக நூலகர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் கடலூர் சுந்தரமூர்த்தி முதலானோர் பங்கேற்றனர். முடிவில் ஷகிலா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *