பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!

Viduthalai
1 Min Read

வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது! பெரியாரே வெல்வார்! என மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறினார்.
கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு 16. 2 .2025 ஞாயிறு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடலூர் பேருந்து நிலையத்தில் வட்டார செயலாளர் மணிவாசகம் வரவேற்புரை ஆற்றிட வட்டார செயலாளர் மு ஆனந்தி தலைமை தாங்கிட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் பாலு ஒருங்கிணைப்பு செய்தார்.
கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “மக்கள் அதிகாரம் மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர்களை வாழ்த்தியும் மாநாட்டின் தீர்மானங்கள் நோக்கங்கள் நிறைவேறிட வாழ்த்தியும், பெரியாரே வெல்வார் எந்த சக்தியாலும் தந்தை பெரியாரை மக்களுடைய உள்ளத்தில் இருந்து அகற்ற முடியாது” என் பதை மய்யப்படுத்தி கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை/சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நோக்க உரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் மாதவன், சரவணன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் மார்பன், புரட்சிகர மாண வர் அணி பால்ராஜ், ராஜ சங்கர், மணிகண்டன், செந்தாமரை கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் வடலூர் கழக அமைப்பாளர் முருகன், வடகுத்து பெரியார் படிப்பக நூலகர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் கடலூர் சுந்தரமூர்த்தி முதலானோர் பங்கேற்றனர். முடிவில் ஷகிலா நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *