இந்து சமய அறநிலையத்துறை வசம் விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை!

Viduthalai
1 Min Read

விழுப்புரம், ஜூலை 13- விழுப்புரம் – கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள வள்ளலார் அருள் மாளி கையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கையகப்படுத்தினர். 

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்  அறக்கட்டளை சார் பில் வள்ளலார் அருள் மாளிகை இயங்கி வருகிறது. இதை அண்ணா மலை உள்ளிட்டோர் நிர்வகித்து வந்தனர்.

இந்த நிலையில், இங்கு முறை கேடுகள் நடைபெறுவதாகக் கூறி, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீனி வாசன் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அண்ணாமலை முறை யீடு செய்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் இணை  ஆணையர் மூலம் தக்காரை நிய மித்து  நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

தொடர்ந்து, அண்ணாமலைக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆம் தேதி வள்ளலார் அருள் மாளிகையை கையகப்படுத்துவதற் கான உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து, செவ்வாய்க் கிழமை காலை இந்து சமய அற நிலையத் துறை  அலுவலர்கள் வள்ளலார் மாளிகைக்குச் சென் றனர்.

அந்த மாளிகை பூட்டப்பட்டி ருந்ததால், அதை  உடைத்து, உள்ளே நுழைந்து கையகப் படுத்தினர்.

இதற்கான தக்காராக பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் செயல் அலு வலர் மதனா நியமிக்கப்பட்டு, அவர்  வள்ளலார் மாளிகையை கையகப்படுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *