கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழ்நாடு தழுவிய போராட்டம் சமூகநீதி மாணவர் இயக்கம் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,பிப்.19- என்றோ அரசு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை சமூகநீதி மாணவர் இயக்கம் முன்னெடுக்கும் என்று மாநில செயலாளர் கோவை அம்ஜத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவ பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

யுஜிசியின் புதிய விதிமுறைகளை கொண்டு வந்து மாநில உரிமைகளை பறிப்பது, ஆளுநர்களை வைத்து மாநில அரசை இயங்காமல் தடுக்க சதி செய்வது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்துவது, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாநில கல்வி கொள்கைகளுக்கு வேட்டு வைப்பது, நீட் போன்ற நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை தடுப்பது போன்ற தனது திட்டங்களை ஏற்காத மாநிலங்களை ஒன்றிய அரசு திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த அடாவடித்தனங் களை தமிழ்நாடு மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். எனவே ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை எஸ்எம்ஐ முன்னெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *