செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

பொது இடங்களில் இடிபாட்டு கழிவுகள் கொட்டினால் அபராதம்
சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் 30 நாள்களுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக உள்ள சாய்குமார், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் ராஜேஷ் லக்கானிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ந.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *