ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழ்நாடு அரசு அனுமதி

1 Min Read

சென்னை,பிப்.18- அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய, தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில், 50 வயதுக்கு மேல், 1.06 லட்சம் ஆசிரியர்கள்; அதற்கு கீழ், 1.17 லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், முதற்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அவர்களையும் மூன்றாக பிரித்து, ஆண்டுக்கு 35,000 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய, ஆசிரியருக்கு 1,000 ரூபாய் வீதம் 3.56 கோடி ரூபாயை, தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *