மேட்டுப்பாளையம், பிப். 18- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ்விணையர் சுப்பு லட்சுமி மறைவையொட்டி நேற்று (17.2.2025) மதியம் 1 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பாக காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் சு.வேலுசாமி தலைமையில் தோழியர் சுப்புலட்சுமி உடலுக்கு மலர்மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பாசமலர் ஆறுமுகம் அவர்களுக்குத் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
பாசமலர் ஆறுமுகம் அவர்களின் மகன், மாவட்ட தலைவர் சு.வேலு சாமி ஆகியோ ரிடம் இரங்கல் தெரிவித்த துடன் தன்னால் நேரில் வர இயலாததிற்கு வருந் தியதுடன் தலைமைக் கழகத்தின் சார்பிலும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
இரங்கல் நிகழ்வில் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பை யன், சாவித்திரி சுப்பை யன், மாவட்ட கழக.செயலாளர் கா.சு.அரங்கசாமி, மேட்டுப் பாளையம் நகர தலைவர் கே.கோ.அர.பழனிசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன், மாவட்ட துணைசெயலாளர் நாரா யணன், நகர தலைவர் கோ.அர.பழனிசாமி, காரமடை முருகேசன், பகுத்தறிவாளர் கழகம் ரங்கராஜ், சுந்தரமூர்த்தி, காரமடை ஒன்றிய செய லாளர் ஏ.எம்.ராஜா, மேடூர் முருகசாமி, பிரபாகரன், மணி, தமிழ் மணி, லியாகத் அலி, முத்துசாமி, மல்லிகா, ராஜலட்சுமி, சுதா, கோவை பழ.அன்பரசு, திராவிடமணி, லூகாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.