கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வீ. பாலசுப்பிரமணியன் – ருக்குமணி அம்மாள் ஆகியோரின் நினைவாக வி.பி.ஆர். கல்வி அறக்கட்டளையின் சார்பில் அவரது குடும்பத்தினர் இணைந்து 4,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். 2023ஆம் ஆண்டு பள்ளிப் பொதுத் தேர்வுகளில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு வி.பி.ஆர். கல்வி அறக்கட்டளையின் சார்பில் பரிசுகளை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து வி.பி.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் பா. இந்திர ஜித், தி.மு.க. ஒன்றிய செயலாளர் (வடக்கு) பால. ஞானவேல், கோட்டூர் ஒன்றிய பெருந் தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி. ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் மஞ்சுளா இளரா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா. அம்புஜம் ஆகியோர் வழங்கினர். உடன் கோட்டூர் பால சுப்பிரமணியம் குடும்பத்தினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மு.விஜயதீபா உள்ளனர். (12.7.2023)