கோட்டூர் வீ. பாலசுப்பிரமணியன் – ருக்மணி அம்மாள் கலையரங்கம் திறப்பு விழா

1 Min Read

அரசியல்

அரசியல்

அரசியல்

கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வீ. பாலசுப்பிரமணியன்  – ருக்குமணி அம்மாள் ஆகியோரின் நினைவாக வி.பி.ஆர். கல்வி அறக்கட்டளையின் சார்பில்  அவரது குடும்பத்தினர் இணைந்து 4,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். 2023ஆம் ஆண்டு பள்ளிப் பொதுத் தேர்வுகளில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு வி.பி.ஆர். கல்வி அறக்கட்டளையின் சார்பில் பரிசுகளை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து வி.பி.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் பா. இந்திர ஜித், தி.மு.க. ஒன்றிய செயலாளர் (வடக்கு) பால. ஞானவேல், கோட்டூர் ஒன்றிய பெருந் தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி. ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் மஞ்சுளா இளரா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா. அம்புஜம் ஆகியோர் வழங்கினர். உடன்  கோட்டூர் பால சுப்பிரமணியம் குடும்பத்தினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மு.விஜயதீபா உள்ளனர். (12.7.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *