குமரி மாவட்டக் கல்லூரி மாணவர்களிடம் சமூகநீதி கருத்துகள் பரப்புரை

1 Min Read

நாகர்கோவில், பிப். 17- குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகம். சமுகநீதி கருத்துகள் இட ஒதுக்கீடு உரிமைகள் குறித்த நூல்கள் கழக துண்டறிக்கைகளை கொடுத்து குமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள் தோழர்கள்.

மாணவர்களின் உரிமைக்காக உழைக்கும் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய மேலான செயல் பாடுகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர் குமரி மாவட்ட கழகத் தோழர்கள். இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார் தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி படித்து தங்களுக்காக செயல்படும் திராவிடர் கழகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
குமரிமாவட்டம் முழுமையாக இந்த துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *