ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்று (16.2.2025) ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மேனாள் அமைச்சர்கள் டாக்டர் சுந்தர்ராஜன்,சத்தியமூர்த்தி, மேனாள் எம்.பி.பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் மீனவர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள், மீனவ பெண்கள், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசையும் இலங்கை அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர்.