தமிழ்நாடு மீனவர்கள் மீது ஒன்றிய அரசிற்கு கரிசனம் கிடையாது கனிமொழி எம்பி கண்டனம்!!!

1 Min Read

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்று (16.2.2025) ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மேனாள் அமைச்சர்கள் டாக்டர் சுந்தர்ராஜன்,சத்தியமூர்த்தி, மேனாள் எம்.பி.பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் மீனவர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள், மீனவ பெண்கள், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசையும் இலங்கை அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *