முனைவர் துரை சந்திரசேகரன் வியட்நாம் பயணம்!
பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு மற்றும் உலகத் தமிழ் வணிகர் மாநாடு இம்மாதம் 21, 22 நாட்களில் வியட்நாம் டா நாங் நகரில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் செல்கிறார். ஏழு நாட்கள் (19 முதல் 25 முடிய) வியட்நாமில் பயணம் மேற்கொள்கிறார்.