காற்றாலை மின்சாரம், பசுமை போக்குவரத்து தொடர்பான புத்தாக்க தொழில் துறைக்கான தேசிய மாநாடு

Viduthalai
1 Min Read

சென்னை, பிப்.16- சுற்றுச்சூழல் மறுசீரமமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக தனது பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் மீது வணிக தலைமைத்துவத்திற்கான மய்யம் என்பதனை UNGCNI-இன் ஒத்துழைப்போடு ரீபெக்ஸ் குழுமம் சமீபத்தில் நிறுவியிருக்கிறது.
சென்னை தி லீலா பேலஸ் அரங்க வளாகத்தில் நடைபெற்ற அய்க்கிய நாடுகளின் உலகளாவிய காம்பேக்ட் நெட்வொர்க் இந்தியா (UNGCNI)இன் 19ஆவது தேசிய மாநாட்டு நிகழ்வில் ரீஃபெக்ஸ் குழுமத்தின் தலைமைத்துவத்தையும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தியது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை போக்குவரத்து, தொழிலக கழிவு மேலாண்மை, காற்றாலை மின்சாரத்திற்கான டர்பைன் உற்பத்தி, சாம்பல் அகற்றல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய பல்வேறு பிரிவுகளில் எமது நிலைப்புத் தன்மையுள்ள பிசினஸ் மாடல், சுற்றுச் சூழல் சார்ந்த பராமரிப்புப் பணி, பொருளாதார மதிப்பு உருவாக்கம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு ஒரு சிறந்த சாட்சியமாகத் திகழ்கிறது என்று இம்மாநாட்டின் வரவேற்புரையில் ரீஃஸக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், இம்மாநாட்டு நிகழ்வின் அமைப்பாளருமான அனில் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *