அய்யய்யோ அய்யப்பா!

1 Min Read

அய்யப்பனை கும்பிடச்சென்றவர்களின் கார் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது

தேனி, பிப். 16- அய்யப்பனை கும்பிடச்சென்றவர்கள் கார் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தால் காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
கருநாடகா மாநிலம் ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் கோபால் நாயக். இவர் தனது நண்பர்களுடன் காரில் சபரிமலை அய்ய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திருப்பிய போது தேனி அருகே கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே தீப்பற்றி எரியத்துவங்கியது. இதைக்கண்ட அவர்கள் பதறியடித்துக்கொண்டு காரை விட்டு கீழ் இறங்கி தப்பி ஓடினர்.

இறங்கிய நொடிப்பொழுதில் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தால் காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *